தமிழ் மக்களின் கலாச்சார ஆடைகளான வேட்டி, சேலை என்பன இன்று எமது பெரும்பாலான ஆண்கள், பெண்களால் மறந்து விடும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நேற்றைய தினம் காலை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலுக்கு வெள்ளைக்காரர்கள் ஆண்களும், பெண்களுமாக வருகை தந்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் அழகான வேட்டி, சேலையில் வந்திருந்தது கவனிப்புக்கு உரியது. இதனை நல்லூருக்கு நேற்று வந்திருந்த பக்தர்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
குறைந்தப்பட்சம் கோவில் போன்ற இடங்களுக்கு செல்லும் எம் ஆண்களும், பெண்களும் தமிழர் கலாச்சார உடையில் செல்வது நல்லது.
0 comments:
Post a Comment