//]]>

Monday, January 30, 2017

யாழ்.நல்லூரில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து இளைஞர் குழு அட்டகாசம்: வாள்வெட்டுக்கு இலக்காகி இரு இளைஞர் படுகாயம்(Photo)

யாழ்.நல்லூர் அரசடி வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று திங்கட்கிழமை(30) இரவு 07.30 மணியளவில் மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த மர்மக்  கும்பலொன்று வர்த்தக நிலையத்திலிருந்த இளைஞர்கள் இருவரை வாள்களால் சரமாரியாக வெட்டியதுடன், கடைக்குப் பெற்றோல் குண்டும் வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.  

வாள்வெட்டிற்கு இலக்கானவர்கள் படுகாயமடைந்த நிலையில் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். . 

இந்தச் சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் மற்றும் அயலவர்களிடம் தீவிர விசாரணை நடாத்தி வருகின்றனர். 

குறித்த சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment