தொண்டமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினால் மாதாந்தம் வெளியிடப்படும் ஞானச்சுடர் சஞ்சிகையின் மாசிமாத வெளியீடு நாளை வெள்ளிக்கிழமை(23) முற்பகல்-10.30 மணி முதல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
குறித்த சஞ்சிகையின் வெளியீட்டுரையை இளைப்பாறிய ஆசிரியர் திருமதி- புனிதவதி சண்முகலிங்கம் நிகழ்த்தவுள்ளதுடன் மதிப்பீட்டுரையை முதுநிலை விரிவுரையாளர் திருமதி- நாச்சியார் செல்வநாயகமும் ஆற்றுவார்.
இதேவேளை இந்தமாத ஞானச்சுடர் மாசிமாத சஞ்சிகை 242 ஆவது மலராக வெளிவரவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment