//]]>
அல்லிப்பூ பறிக்க பட_

Wednesday, February 1, 2017

யாழில் மீண்டும் வாள்களுடன் காவாலி மாணவர்கள் கைது (Photos)


யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் யாழ்.அரசடி பகுதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

 இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களே யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்கள் 18 வயது மற்றும் 21 வயதுடைய பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்வியை தொடர்ந்து கொண்டிருப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 வாள்கள், 2 கை கோடாரிகள், ஒரு கையடக்க தொலைபேசி, சிறிய கைக்கத்தி மற்றும் 1 முகமூடி ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

 இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் தலைகவசம் ஆகியவற்றில் இரத்தகறை காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட உள்ளனர். வாள்களுடன் அச்சுறுத்தும் இவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்