//]]>
அல்லிப்பூ பறிக்க-

Friday, March 9, 2018

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி விமான நிலையத்தில் கைது(Photo)

தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் இன்று வெள்ளிக்கிழமை(09) நண்பகல்- 12 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்குப் பயணம் செல்வதற்காக விமான நிலையத்திற்குச் சென்றிருந்த அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விமான நிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கடந்த 23.08.2016 அன்று கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் தென்னிலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கோமகன் கடந்த 29.02.2016 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் ஆலய வழிபாட்டுக்காக கடந்த- 2016 ஆம் ஆண்டு யூலை மாதம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்டபோது  கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். எனினும், விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.  இதன் பின்னர் பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.தவராசா ஊடாக கோமகன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்று வெளிநாட்டுக்கான பயணத் தடையை நீக்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்