//]]>
அல்லிப்பூ பறிக்க படகி_

Thursday, December 8, 2016

ஒரே மாதத்தில் மட்டும் யாழில் 567 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சை


கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 567 பேர் வரை நாய்க்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி  ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் மொத்தமாக 567 வரையானோர் நாய்க்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். 

இவர்களில் 104 பேருக்கு விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நாய்க் கடிக்கு இலக்கான ஏனையவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 

நாய்க் கடிக்கு உள்ளாகுபவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்